சன் ரைசர்ஸ் அணியில் சூப்பர் ஸ்டார் வீரர்களே கிடையாது – லஷ்மணன் அதிரடி

VVS
- Advertisement -

இந்த வருடம் 12ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நாளை மறுதினம் 23ஆம் தேதி மாலை 6 மணிக்கு துவங்குகிறது. முதல் போட்டி சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகளுக்கு இடையே இரவு 8 மணிக்கு துவங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டிக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது என்றே கூறலாம்.

Ipl cup

- Advertisement -

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தங்களது சொந்த மைதானங்களில் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சன் ரைசர்ஸ் அணி அணி ஹைதராபாத்தில் பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சன் ரைசர்ஸ் அணியின் மென்டர் வி.வி.எஸ் லஷ்மண் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார்.

அதில் லஷ்மண் கூறியதாவது : எங்கள் அணி கடந்த ஆண்டு இறுதிபோட்டி வரை சென்று தோல்வியை சந்தித்து இரண்டாவது அணியாக தொடரை முடித்தது. இந்த ஆண்டு தொடரை கைப்பற்றும் முனைப்பில் சன் ரைசர்ஸ் அணி உள்ளது. மேலும், எங்கள் அணியில் நட்சத்திர வீரர் யாரும் இல்லை, அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டு ஒவ்வொரு போட்டியிலும் நட்சத்திரமாக மாறவே நாங்கள் விரும்புகிறோம்.

srh

மேலும் வில்லியம்சன் ஒரு கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக தனது ஆட்டத்தினை தொடர்கிறார். இந்த ஆண்டு வார்னர் அணியில் இணைந்து உள்ளார். மேலும், விஜய் ஷங்கர் போன்ற ஆல் ரவுண்டர் வீரர்கள் அணியில் இணைந்திருப்பதால் இது அணிக்கு ஆரோக்கியமே. எங்கள் அணி இப்போது கலவையாக சிறந்த அணியாகவே உள்ளது என்று லஷ்மண் கூறினார்.

Advertisement