- Advertisement -
ஐ.பி.எல்

இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது பஞ்சாப் அணியா ? ராஜஸ்தான் அணியா ?

ஐ.பி.எல் போட்டி தொடரின் நான்காவது போட்டி இன்று ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணி மிக மோசமாக ஆடியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் ஜெயிக்கும் அணியை பற்றிய அலசலே இந்த பதிவு. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணியில் பட்லர், ஸ்டோக்ஸ், டர்னர் மற்றும் ஸ்மித் போன்ற பல்வேறு வீரர்கள் அந்த அணியில் உள்ளனர். பந்துவீச்சினை பொறுத்தவரை ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சரை தவிர சொல்லிக்கொள்ளும்படி யாருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணியில் கெயில், மில்லர், ஆண்ட்ரு டை மற்றும் முஜுபீர் ரஹ்மான் போன்ற வெளிநாட்டு வீரர்களை கொண்டுள்ளது. மேலும், ராகுல், ஷமி, கருண் நாயர், மாயங் அகர்வால் போன்ற பலவீரர்கள் உள்ளனர். ராஜஸ்தான் அணியை காட்டிலும் பஞ்சாப் அணி பந்துவீச்சில் சிறிது பலமாகவே உள்ளது என்று கூறலாம்.

இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுவதால் ராஜஸ்தான் அணிக்கு அது கைகொடுக்கும். இருப்பினும், பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை மிகுந்த பலம் வாய்ந்தது என்பதால் அந்த அணிக்கும் வெற்றிக்கு வாய்ப்புள்ளது. எனவே, இந்த போட்டியில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெரும் என்பது எங்களின் கணிப்பு.

- Advertisement -
Published by