கண்கலங்கிய கே எல் ராகுல்.! விராட்கோலி அனுஷ்கா குடுத்த புத்தாண்டு பரிசு..!

- Advertisement -

இந்திய அணியின் இளம் ஆட்டக்காரரான கே எல் ராகுல் இந்திய அணியில் இதுவரை 10 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியில் இடம்பெறுவதற்கு முன் கர்நாடக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்தார்.

viratrahul

- Advertisement -

கர்நாடக மாநிலம் மங்கலூரை பூர்வவீகமாக கொண்ட இவர் 19-வயதிற்குட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். 2013 ஆம் ஆண்டில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடினார். அதன்  பின்னர் 2014 இல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்காக விளையாடி வருகிறார்.

2014 ஆம் ஆண்டு இந்திய அணியில் ராகுல் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரலியாவிற்கு எதிரான போட்டியில் பங்குபெற்றார். தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே டக் அவுட் ஆகி மிகவும் மோசமான மன நிலையில் இருந்த ராகுலிற்கு இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான கோலி மற்றும் அவரது மனைவியும் மிகவும் ஆதரவு அளித்ததாகவும் தனக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்திலும் இருந்து வந்தனர் என்று ஒரு பேட்டியில் ராகுல் கூறியுள்ளர்.

rahul

சமீபத்தில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய ராகுல்’நான் ஆஸ்திரேலியாவில் இருந்த போது விராட் மற்றும் அவரது மனைவி அனுஷ்காவும் என் மீது தனி அக்கறை கொண்டு கவனித்து கொண்டனர். அவர்கள் என்னுடன் புத்தாண்டை கழித்து நான் தனியாக இருக்கிறேன் என்ற எண்ணத்தை எனக்கு வரவிடாமல் என்னை பார்த்துக் கொண்டனர். அவர்கள் இருவரும் மிகவும் அருமையான தம்பதியர்கள்’ என்று நேகிழ்ச்சியுடன் கூறியுளளார் ராகுல்.

Advertisement