குழந்தை காப்பகத்தில் யுவராஜ் செய்த செயல்..!நெகிழ்ச்சியில் கண்கலங்கிய ரசிகர்கள்..! வீடியோ உள்ளே

yuvarajsing
- Advertisement -

இந்திய அதிரடி வீரர் யுவராஜ் சிங், கிரிக்கெட்டா , புற்று நோயா என்று சோதனை வந்த போது, புற்று நோயை வென்று கிரிக்கெட் மீதான தனது காதலை நிரூபித்த ஒரு அதிரடி வீரர். இந்திய அணி உலக கோப்பையை வெல்ல ஒரு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங்கை புற்றுநோய் சோதித்தது. இருப்பினும் சிகிச்சை பெற்று மீண்டும் அணியில் திரும்பிய யுவராஜ் சிங்கிற்கு அவரது பேட் ஒத்துழைக்கவில்லை.

Yuvarajsing

- Advertisement -

ஒரு காலத்தில் இந்திய அணியின் அதிரடி வீரரான யுவராஜ் சிங் இந்திய அணியில் இரண்டாவது வாய்ப்பை பெற்றபோது தனது பழைய ஸ்டைலை வெளிக்காட்ட மிகவும் சிரமப்பட்டார். இதனால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்திய அணியில் இடம்பெறவில்லை என்றாலும், என்றும் இவரது நல்ல குணத்தால் ரசிகர்களின் மனத்தில் நிலைத்து வருகிறார்.

இந்நிலையில் யுவராஜ் சிங் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்ட அந்த வலியை வேறு யாரும் உணரக்கூடாது என்று எண்ணி, தற்போது பல புற்று நோயாளிகளுக்கு உதவிகளை செய்து வருகிறார். அத்தோடு புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் தனது ஒவ்யூ நேரத்தை கழித்து வருகிறார் .

சமீபத்தில் ஒரு குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றிருந்த யுவ்ராஜ் சிங் அங்கே இருக்கும் குழந்தைகளிடம் தனது நேரத்தை செலவழித்தார். மேலும் குழந்தைகள் உணவருந்தும் போது பக்கத்தில் அமர்ந்திருந்த யுவராஜ், ஒரு குழந்தை உணவு உண்டுகொண்டிருக்கும் போது அந்த குழந்தையின் வாய் மற்றும் கையை தானே ஒரு கைகூட்டடையை எடுத்து சுத்தம் செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை நெகிழவைத்துள்ளது.

Advertisement