நீச்சல் குளம் அருகில் நடந்த விருந்து. சமையல்காரராக மாறிய ஹர்பஜன் – புகைப்படம் உள்ளே

harbhajan
- Advertisement -

இந்த ஆண்டு 12ஆவது ஐபிஎல் தொடர் 23ம் தேதி வரும் சனிக்கிழமை அன்று இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இந்த முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

Ipl cup

- Advertisement -

இதற்காக சென்னை அணி வீரர்கள் ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில் இன்று சென்னை அணியில் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

அது யாதெனில் இன்று பயிற்சியை மேற்கொண்ட சென்னை அணி வீரர்கள் பயிற்சியின் இடையே மதிய வேளையில் வீரர்களுக்காக சிறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விருந்தினை சென்னை வீரர்கள் சாப்பிட்டனர். இருப்பினும் இந்த விருந்தினை சமைக்கும்போது சென்னை அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் என அனைவரும் சிறுசிறு வேலைகளைச் செய்தனர்.

அதில் குறிப்பாக ஹர்பஜன் சிங் சமையல் செய்யும் நபருடன் சேர்ந்து குக்காக மாரி சமையல் செய்தார். இது போன்ற கேளிக்கைகள் நடந்த பின்பு ஒரு வேலையாக உணவு பரிமாறப்பட்டு அனைவரும் சாப்பிட்டனர். இந்த விருந்து மைதானத்தின் நீச்சல் குளம் அருகில் நடந்தத குறிப்பிடத்தக்கது.

Advertisement