நான் சொன்னா சிரிப்பீர்கள் ஆனால் இவரே உலககோப்பைக்கு 4 ஆவது வீரராக களமிறங்க வேண்டும் – கங்குலி

Ganguly
- Advertisement -

இந்திய அணியின் சமீபத்திய ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் தோல்வி தற்போது ஏகப்பட்ட கேள்விகள் எழும்ப வாய்ப்பாக அமைந்தது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை சற்று பலவீனமாக இருப்பதே அதன் காரணம். ரோஹித், தவான் மற்றும் கோலி ஆகியோர் ஆட்டமிழந்தால் இந்திய அணியின் ரன் விகிதம் ரொம்பவே சுமார் தான்.

இந்நிலையில் இந்திய அணியின் உலகக்கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில் கங்குலி கூறியதாவது : இன்று நான் இந்திய அணியின் மொத்த மிடில் ஆர்டரில் ஏற்படுத்தும் மாற்றம் குறித்து கூற விரும்பவில்லை நம்பர் 4 ஆம் இடத்தில் ஆடுபவரை மட்டுமே நான் கூறப்போகிறேன்.

- Advertisement -

தற்போதைய இந்திய அணியில் முதல் மூன்று வீரர்களில் எந்த மாற்றமும் தேவையில்லை. அனால், 4 ஆவது வீரராக களமிறங்கும் ராயுடுக்கு பதிலாக புஜாராவினை களமிறக்கலாம். இதனை நான் சொன்னால் நிச்சயம் நீங்கள் சிரிப்பீர்கள் என்று தெரியும். ஆனால், 4 ஆவது இடத்தில விளையாட சிறந்த தரமான வீரர் ஒருவர் தேவை.

pujara1

தற்போது இருக்கும் இந்திய அணி வீரர்களில் நம்பத்தகுந்த தரமான வீரர் என்றால் நான் புஜாராவை கூறுவேன். அவரிடம் டெஸ்ட் போட்டியில் மட்டுமல்ல ஒருநாள் போட்டியிலும் சிறப்பான, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நான் கருதுகிறேன் என்று தெரிவித்தார் கங்குலி.

Advertisement