தோனி இருந்தால் பின் வரிசை பலப்படுமா ? அப்படி ஏதும் எனக்கு தெரியவில்லை – கம்பீர் கேள்வி

Ganbhir
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து முடிந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

Ms Dhoni Bhuvneshwar-Kumar

- Advertisement -

இந்த தொடரின் இந்திய அணியின் தோல்விக்குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான கவுதம் கம்பீர் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

அதில் கம்பீர் கூறியதாவது : விராட் கோலியின் இந்த அணி உலகக்கோப்பை தொடரை கைப்பற்றும் அளவிற்கு தகுதி உடையது என்று அவர் நினைக்கிறார். ஆனால், எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லை. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டாலும் பின்வரிசை வீரர்கள் சொதப்பி வருகின்றனர்.

dhonirishab

மேலும், பின்வரிசையில் தோனி தொடர்ந்து ஆடினாலும் எனக்கு அது பெரிய பலமாக தெரியவில்லை. நமக்கு இருப்பது வெகு சில நாட்களே அதற்குள் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று கம்பீர் தனது கருத்தினை தெரிவித்தார்.

Advertisement