சச்சின் மகளா இது..! வாயை பிளக்கும் ரசிகர்கள்..!

- Advertisement -

கிரிக்கெட் உலகின் பேட்டிங் ஜாம்பவான் என்று கருதப்பட்ட சச்சின் டெண்டுலகருக்கு சாரா என்ற மகளும், அர்ஜுன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் அர்ஜுன் இந்திய யு19 அணியின் இடம்பெற்று விளையாடி வருகிறார். ஆனால், சச்சினின் மகள் சாரா குறித்து இது வரை எந்த ஒரு பெரிய செய்திகலோ, வதந்திகளோ வெளியானது இல்லை.

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. 20 வயதேயான சாரா மும்பையில் உள்ள துருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தற்போது லண்டனில் உயர் படிப்பை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீப காலமாக சாராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது.

- Advertisement -

சமீப காலமாக சாராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைபடங்கள் வெளியாகி வந்தனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வந்தனர். சாரா எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதற்க்கு ஆயிர கணக்கில் லைக்ஸ்களும் , கமண்ட்களும் குவிந்த வண்ணம் இருந்தது. ஆனால், சாரா எந்த ஒரு சமூக பக்கத்திலும் கணக்கு வைத்திருக்கவில்லை என சாராவின் தந்தையான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த சச்சின் டெண்டுல்கர்”நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னுடைய மகன் அர்ஜுன் மற்றும் என்னுடைய மகள் சாரா ஆகிய இருவரும் எந்த ஒரு ட்விட்டர் கணக்கையும் வைத்திருக்கவில்லை. எனவே, இவர்கள் பெயரில் உள்ள கணக்கை நீக்க வேண்டும் என்று ட்விட்டரை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement