ஐ.பி.எல் போட்டிகளில் தோனி அடித்து நொறுக்க இந்த இடத்தில் தான் களமிறங்குவார் – பயிற்சியாளர் பேட்டி

Dhoni-1
- Advertisement -

சென்னையில் வரும் 23ஆம் தேதி துவங்க உள்ள முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் இரவு 8 மணிக்கு மோத உள்ளன இதனால் சென்னை அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சென்னை ரசிகர்கள் இப்போதிருந்தே கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐ.பி.எல் தொடரும் சென்னை அணியே கைப்பற்றும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். சென்னை அணியும் கடந்த பல நாட்களாக தொடர்ந்து பயிற்சியினை தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் சென்னை அணியின் பயிற்சியாளரான பிளமிங் இந்த ஐ.பி.எல் போட்டிகளில் தோனி இறங்கும் இடம் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

அதில் பிளமிங் கூறியதாவது : கடந்த 10 மாதங்களாக தோனியின் ஆட்டத்தை நான் கவனித்து வருகிறேன். அவரை ஆட்டம் சமீபகாலமாக அருமையாக உள்ளது. சென்ற வருடமும் சென்னை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை தோனி வெளிப்படுத்தினார். வழக்கமாக இந்திய அணிக்காக 5 ஆவது இடத்தில் இறங்கும் தோனி ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக 4 ஆவது வீரராகவே களமிறங்குவார்.

Dhoni

முன்கூட்டியே அவர் களமிறங்கும்போது அவருக்கு ஆட்டத்தின் போக்கை கணித்து ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்கவும், நிலைத்து ஆடவும் இது உதவியாக இருக்கும் என்று பிளமிங் கூறினார். தோனியின் தலைமையில் சென்னை அணி இதுவரை 3 முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement