மைதான தடுப்பின் மீது ஏறி எகிறி குதித்து ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்ட தல தோனி – வைரல் வீடியோ

MS
- Advertisement -

நாளை மாலை துவங்க உள்ள முதல் ஐபில் போட்டிக்கு முன்பாக இன்று நடைபெற்ற பயிற்சிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி பவுண்டரி லைனில் உள்ள தடுப்பின் மீது ஏறி சென்று சென்னை ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு ட்ரெண்டாக வலம் வருகிறது. இதோ அந்த வீடியோ :

- Advertisement -

இன்று நடைபெற்ற இந்த பயிற்சியை காண பெருமளவில் ரசிகர் கூட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் காணப்பட்டது. தோனி என்றாலே சென்னை ரசிகர்கள் கொண்டாட்டத்தை பற்றி உங்களுக்கு சொல்லி தெரிய தேவையில்லை. அந்த அளவிற்கு சென்னை ரசிகர்கள் தோனியின் மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர்.

இந்த வருட கோப்பையினையும் தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி தொடர்ந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. சென்ற வருடம் வயதானவர்களை கொண்ட அணி என்று கேலி செய்யப்பட்ட சென்னை அணி அனைவர்க்கும் அதிரிச்சி அளிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

Dhoni

இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி கொண்டே வருகிறது.

Advertisement