சென்னை அணி வீரர்களான ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ மற்றும் கேதார் ஜாதவ் ஆகியோர் கிளப்பில் ஆடி பாடி மகிழ்ந்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் இந்த பார்ட்டிக்கு இவர்கள் மற்றும் செல்லவில்லை. இதில் இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் பிராவோ ஆடி பாடி அனைவரையும் உற்சாக படுத்தினார்.
Congratulations @DJBravo47 for ur new song #Asia #djb47brand we all loved the song wish u all the very best ???? pic.twitter.com/2TZwpnyp1E
— IamKedar (@JadhavKedar) March 22, 2019
வழக்கமாகவே பிராவோ இடத்தில் உற்சாகத்துக்கு குறைவில்லாமல் இருக்கும். பாட்டு பாடுவது, பார்ட்டி செய்வது போன்றவற்றை வழக்கமாக கொண்டிருக்கும் பிராவோ இதுபோன்று செய்வது ஒன்றும் புதிதல்ல. கிரிக்கெட் மைதானமாக இருந்தாலும் சரி, மற்ற இடமாக இருந்தாலும் சரி பிராவோ மகிழ்ச்சியினை கொண்டாடும் மற்றும் வெளிப்படுத்தும் விதம் மற்றவரை கவரும்படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்டிங்கிலும் சரி, பந்துவீச்சில் சரி வெஸ்ட் இண்டீஸ் வீரரான பிராவோ தொடர்ந்து கலக்கிவருகிறார். அதனாலே பல ஆண்டுகளாக சென்னை அணியில் அவர் தொடர்ந்து ஆட தோனி அவரை சென்னை அணியிலேயே வைத்துள்ளார். பிராவோ விக்கெட் வீழ்த்தியபின் அந்த விக்கெட்டை கொண்டாடும் விதமும் பலராலும் ரசிக்கும்படியாக இருக்கும்.
இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.