பெங்களுருவில் நடக்கும் போட்டிகளுக்கு நாய்களுடன் வந்தால் சிறப்பு சலுகை – என்ன தெரியுமா ?

Bangalore
- Advertisement -

இந்த ஆண்டு 12 ஆவது ஐ.பி.எல் போட்டிகள் வரும் 23ஆம் தேதியில் இருந்து துவங்குகிறது. 23ஆம் தேதி இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு அணியும் பலபரிட்ச்சை செய்ய உள்ளன. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

VK and MS

- Advertisement -

இந்நிலையில் பெங்களூரு அணியும், பெங்களூரு கிரிக்கெட் மைதானமும் வேற லெவலில் தயாராகி வருகிறது. பெங்களூரு அணி வருடாவருடம் சிறந்த அணியாக வலம் வந்தாலும் பெங்களூரு அணியால் ஒரு முறை கூட இன்னும் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இதனால் பெங்களூரு அணி இந்த முறை கோப்பையை வென்றே ஆகவேண்டும் என்று தயாராகிறது.

மேலும், பெங்களூரு மைதானத்தில் மற்றுமொரு வசதி சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூரு அணி ரசிகர்கள் அதிகமானோர் செல்லப்பிராணிகளை அதிகம் நேசிப்பவர்கள். எனவே, அவர்கள் தங்களது செல்லப்பிராணிகளான நாய்களுடன் போட்டி காணவந்தால் அவர்களுக்கு தனியாக இருக்கையை ஏற்பாடு செய்துள்ளது பெங்களூரு கிரிக்கெட் மைதானம்.

ABD

அதனால் செல்லப்பிராணிகளோடு வருபவர்கள் போட்டியை விமர்சையையாக கண்டுகளிக்க முடியும். இந்த நடைமுறை இந்தியாவிலே பெங்களூரு மைதானத்தில் தான் முதல் முறையாக அமல்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement