தமிழ்நாடு ப்ரீமியர் லீக்..! காரைக்குடி அணிக்கு பயிற்சியாளராகும் CSK வீரர்..! – யார் தெரியுமா..?

badri
- Advertisement -

ஐபிஎல் தொடரை போன்றே பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் தமிழகத்தில் நடந்து வருகிறது. அதில் இரண்டு ஆண்டுகளாக பிரபலமடைந்த வருகிறது தமிழ் நாடு பிரீமியர் லீக் டி20 போட்டிகள்; அடுத்த மாதம் ஜூலை 13 ஆம் தேதி இந்த தொடரின் 3வது சீசன் தொடங்கவிருக்கிறது. இதில் ஒரு அணியின் பயிற்சியாளராக, தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்று வரும் இந்த தொடரில்

- Advertisement -

* சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

* மதுரை பேந்தர்ஸ்

* கோவை கிங்ஸ்

- Advertisement -

* திண்டுக்கல் டிராகன்ஸ்

* திருச்சி வாரியர்ஸ்

- Advertisement -

* காஞ்சி வீரன்ஸ்

* காரைக்குடி காளை

* ஊட்டி பேட்ரியாட்ஸ்

என்று 8 அணிகள் பங்குபெற்று விளையாடி வருகின்றனர். சென்ற ஆண்டு நடைபெற்ற இந்த தொடரின் சென்னை அணியான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சாம்பியன் பட்டதை கைப்பற்றியது . மேலும் இந்த ஆண்டு நடைபெறவுள்ள இந்த தொடரில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் காரைக்குடி காளை அணிக்கு பயிற்சியாளராக,நிர்ணயிக்கப்பட்டுள்ளார்.
Badrinath
இதுபற்றி அவர் தெரிவிக்கையில் “தமிழ் நாடு பிரீமியர் லீக் டி20 ஆரம்பித்த போது நான் காரைக்குடி காளை அணியில் கேப்டனாக இருந்தேன் ஆரம்பத்தில் இருந்தே காரைக்குடி அணியுடன் நான் இருக்கிறேன், தற்போது அந்த அணியின் பயிற்சியாளராக ஆகியுள்ளதால் , அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன் ” என்று கூறியுள்ளார்.

Advertisement