சி.எஸ்.கே அணிக்கு சென்னை மட்டுமின்றி உலகநாடுகள் பலவற்றிலும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். சென்னையில் போட்டி என்று தெரிந்ததும் பலரும் சென்னையில் இந்த போட்டிக்காக ஆரவாரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள சி.எஸ்.கே அணியின் ரசிகர்கள் ஒன்றிணைந்து சி.எஸ்.கே அணியை சிறப்பிக்கும் விதமாக ஒரு குழு நடனத்தை ஆடி அதனை விடியோவாக வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ :
All the #Yellove coming in from across the world! A special one this all the way from #Melbourne! #WhistlePodu ????????https://t.co/egKtvPYQl5
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2019
உலகம் முழுவதும் சென்னை அணிக்கு இருக்கும் இந்த வரவேற்பு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபில் தொடரின் ஆரம்ப காலத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனக்கென பெரும்பகுதி ரசிகர்களையும், கவனத்தையும் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை அணிக்கு ஒரேயொரு கேப்டனாக தோனி மட்டுமே இன்றுவரை உள்ளார்.
கடந்த ஆண்டு வயதானவர்கள் அணி என்று கிண்டலடிக்கப்பட்ட சென்னை அணி அந்த விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் வகையில் அனைத்து அணிகளையும் வென்று இறுதியில் 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று இந்த ஆண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி திறம்பட விளையாடும் என்று நம்பலாம்.
இந்த ஆண்டு 12ஆவது ஐ.பி.எல் போட்டித்தொடர் நாளை மாலை முதல் துவங்க உள்ளது. முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.