உ.கோப்பை அணியில் எனக்கு இடம் இல்லை என்றும் தெரியும். நான் செய்யப்போவது இதுதான் – அஸ்வின்

Ashwin
- Advertisement -

இந்த ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே மாதம் இறுதியில் துவங்க உள்ளது இதற்கான அணிகள் கிட்டத்தட்ட தயாராகி விட்டது என்றே கூற வேண்டும். அந்த தொடருக்கான இந்திய அணியும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூட கூறலாம்.

worldcup

- Advertisement -

இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் தனது இடம்குறித்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் பேட்டி ஒன்றினை தற்போது அளித்துள்ளார். அதில் அஸ்வின் கூறியதாவது : உலகக்கோப்பை இந்திய அணியில் நான் இடம் பிடிக்கப்போவது போவது இல்லை என்று எனக்கு முன்பே தெரியும். ஆனாலும், அதற்காக நான் வருத்தப்பட போவதும் இல்லை.

மேலும்,அணியில் இடம் கிடைக்காததை நினைத்து வருந்துவதை விட சிறந்த கிரிக்கெட்டராக மாறவே நான் ஆசைப்படுகிறேன்.அதற்காக நான் தீவிரமாகவும் உழைத்து வருகிறேன். நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரில் எனது திறமையினை நிரூபிப்பேன் என்றும், தற்போதுவரை 20 ஓவர் பார்மேட்டிலும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்றே கருதுகிறேன் என்று கூறினார்.

ashwin

இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளுக்கு இடையே கோப்பையை கைப்பற்ற பலத்த போட்டி நிலவும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement