இறுதிப்போட்டியில் அவுட் ஆன பிறகு ட்ரெஸ்ஸிங் ரூமில் நடந்தது என்ன – விளக்கம் அளிக்கும் விஜய்சங்கர்

- Advertisement -

இலங்கையில் நடைபெற்று வந்த நிடாஸ்கோப்பை முத்தரப்பு போட்டியின் இறுதி ஆட்டத்தின் போது மிகவும் மோசமாக விளையாடிய தமிழகவீரரான விஜய்சங்கர் பந்தை சிக்ஸருக்கு தூக்க முயற்சித்து அவுட்டாகி சென்றபின் உடைமாற்றும் அறையில் அதன்பின் என்ன நடந்தது என்று விவரித்துள்ளார் விஜய் சங்கர்.விஜய்சங்கரின் மோசமான ஆட்டம்குறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது சிலர் அணியிலிருந்து விஜய்சங்கரை நீக்கவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

vijayshankar

- Advertisement -

இந்நிலையில் தான் அன்று அவுட்டான பின்னர் அணியின் பிற வீரர்கள் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார்கள் உடைமாற்றிடும் அறையில் என்ன நடந்தது என்று அவர் விளக்கி இருக்கிறார்.அன்றைய தினம் நடந்தது குறித்து பேசிய விஜய்சங்கர் ‘ “ஐந்து பந்துகளை தொடர்ச்சியாக நான் மிஸ் செய்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. அது துரதிர்ஷ்டவசமானது. எப்போதாவது ஒருமுறைதான் இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும் கிடைத்த அந்த வாய்ப்பை நழுவவிட்டு விட்டேன். இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கின்றது” என்றார்.

மேலும் பேசிய அவர் ”நான் அந்த பந்தை சிக்ஸருக்கு தான் தூக்க முயற்சித்தேன். ஆனால் பந்து மிஸ் ஆகி விக்கெட்டாகிவிட்டது. ஒருவேளை நான் அடித்த அந்த பந்து சிக்ஸராக மாறி இருந்தால் நிலைமை மாறி இருக்கும். கடுமையாக எடுத்த பயிற்சியெல்லாம் அந்த ஐந்து பந்தில் வீணாகிவிட்டது” என்றார்.

Vijay

தொடர்ந்து பேசிய அவர் ”இந்த தொடர் எனக்கு மிகப்பெரிய அனுபவத்தையும் பக்குவத்தையும் கொடுத்துள்ளது.கடினமான சந்தர்ப்பங்களில் எப்படி ஆட வேண்டும் என்று கற்றுக்கொள்வேன். இனிமேல் இதுபோல நடக்காமல் பார்த்துக்கொள்வேன். நான் விரைவில் மீண்டு வருவேன். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் அதில் சிறப்பாக விளையாடுவேன் என்றார்.

அன்று அவுட்டாகி உடைமாற்றும் அறைக்கு சென்றபோது சகவீரர்கள் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். யாரும் கோபப்படவும் இல்லை. சிலநேரங்களில் நாம் எதிர்பார்க்காத சில நிகழ்வுகள் நடப்பது இயல்பு தான் எங்களுக்கும் இதுபோன்று சிலநேரங்களில் நடந்துள்ளது என்று கூறி அந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக நின்றார்கள். அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

Advertisement