இந்தியாவை பழிதீர்க்க புது ஆயுதத்தை கையில் எடுத்த இங்கிலாந்து..! – இந்தியாவிடம் பலிக்குமா..! – என்ன தெரியுமா..?

india
- Advertisement -

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் டி20 போட்டியில் குல்தீப் யாதவின் மாயாஜால சுழல் பந்து வீசிசால் இங்கிலாந்து அணி திணறியது.மேலும், இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியதற்காக குல்தீப் யாதவிற்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கபட்டது.
england
கடந்த ஜூலை 3 ஆம் தேதி நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க 5 ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இந்திய அணியின் குல்தீப் யாதவ் கைப்பற்றினர்.அதிலும் இந்த போட்டியின் 14 வது ஒவரில் குல்தீப் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இங்கிலாந்து அணி வீரர்களை திணறடித்தார். குல்தீப் யாதவ் குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயன் மோர்கன் பேசியபோது கூட” குல்தீப் யாதவ் இந்த தொடரில் எங்களுக்கு கண்டிப்பாக ஒரு அச்சுறுத்தலாக இருப்பார்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டி என்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி தோற்கும் பட்சத்தில் இந்த டி20 தொடரை இந்தியா கை பற்றிவிடும். இதனால் இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்காக இங்கிலாந்து அணி தீவிரமாக பயிற்சி செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் புதிதாக களமிறங்கிய சைனா மென் குல்தீப் யாதவ் பந்துகளை எப்படி சமாளிப்பது என்பதற்க்க தற்போது இங்கிலாந்து அணி என்பதால் மெர்லின் மிஷினை பயன்படுத்த இங்கிலாந்து வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் போட்டி பொறுத்தவரை ஒரு அணி புதிதாக எதிர்கொள்ளும் வீரர்களை சைனா மென் என்று அழைப்பார்கள். அந்த வகையில் இந்த தொடரில் சைனா மென் குல்தீப் யாதவை சமாளிக்க தற்போது இங்கிலாந்து அணி இந்த யுத்தியை பயன்படுத்தியுள்ளது. மெர்லின் மிஷினை பொறுத்தவரை திரையில் குல்தீப் பந்து வீசுவது போன்று இருக்கும். அவர் போடுவது போல் பந்து எதிரில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு வரும். இப்படி தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் போது, களத்தில் அது உதவியாக இருக்கும்

- Advertisement -
Advertisement